டெல்லி: ஐப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடோவை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் மீண்டும் ஃபுமியோவை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். 3நாட்கள் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று ஜப்பான் செல்லும் நிலையில் ட்வீட் செய்துள்ளார். உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவை பற்றி ஜி7 மாநாட்டில் கருத்து பரிமாற்றத்தை எதிர்நோக்குகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
The post ஐப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடோவை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் appeared first on Dinakaran.